Monday, March 3, 2014

Osai Nayaki Amman Temple Sirkazhi Tirukollakka

அருள்மிகு ஒம் ஒசைநாயகி சமேத தாளபுரிஸ்வரர் திருகோவில் திருகோலக்கா சீர்காழி 

Iyer Mobile No - 9865885780,
ஐயர் தொலைபேசி எண் - 9865885780
தல சிறப்பு 
வாய் பேசமுடியாதவர்கள் இந்த தலத்தில் அபிஷேகத்தில் தேன் படைத்து அதை தினமும் அருந்தி வர பேசும் சக்திகிட்டும் 
 
நாளும் இன்னிசை யால்தமிழ் பரப்பும்
ஞான சமந்த னுக்குல கவர்முன்
தாளம் ஈந்தவன் பாடலுக் கிரங்கும்
நன்மை  யாளனை என்மனக் கருத்தை
ஆளும் பூதங்கள் பாடநின் றாடும்
அங்க  ணன்றனை எண்கணம் இறைஞ்சும்
கோளி லிப்பெரும் கோயிலுள் ளானைக்
கோலக் காவினிற் கண்டு கொண்டேனே.
 
 
சீர்காழியில் பிறந்து வளர்ந்த திருஞானசம்பந்தர் திருக்கோலக்கா அல்லது 
திருத்தாளமுடையார் கோவில் என்று வழங்கும் இத்தலத்தில் இருந்து தான் 
தன்னுடைய சிவஸ்தல யாத்திரையைத் தொடங்கினார். சுமார் மூன்று வயதுடைய 
சம்பந்தர் தனது சின்னஞ்சிறு கைகளால் தட்டி தாளம் போட்டுக்கொண்டு இறைவனைத் 
துதித்து பதிகம் பாடினார். கைகள் வலிக்குமே என்று சம்பந்தருக்காக 
இரக்கப்பட்ட இத்தலத்து இறைவன் சம்பந்தருக்கு இரண்டு பொற்றாளம் கொடுத்து 
அருளினார். இறைவி அதற்கு தெய்வீக ஓசையைத் தந்தருளினாள். ஆதலின் இத்தலத்து 
அம்பிகைக்கு ஓசை கொடுத்த நாயகி என்று பெயர். சம்பந்தருக்கு பொற்றாளம் தந்த 
இறைவனை சுந்தரர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். 

 பார்வதிதேவியால் ஞானப்பால் கொடுக்கப்பட்ட திருஞான சம்பந்தர், பல தலங்களுக்கு சென்று, தனது சிறு கைகளால் தாளம் போட்டு பாடுவதைப்பார்த்தார் சிவன். குழந்தையின் கைகள் வலிப்பது பொறாமல், அவருக்கு தங்கத்தால் ஆன இரண்டு தாளங்களை கொடுத்தார். தட்டிப்பார்த்தார் சம்பந்தர். ஆனால் அதிலிருந்து ஓசை வரவில்லை. உடனே அந்த தாளத்திற்கு ஓசை கொடுத்தாள் அம்மன். எனவே தான் இங்குள்ள மூலவர் தாளபுரீஸ்வரர் எனவும், அம்மன் ஓசைநாயகி எனவும் அழைக்கப்படுகிறார்கள்.

இசைக்கலையில் விருப்பமுள்ளவர்கள் இங்கு வந்து வழிபட்டு சென்றால் இசையில் வல்லவராகலாம். கோயிலின் நுழைவு வாயிலிலேயே ஞானசம்பந்தருக்கு தாளம் கொடுக்கும் ஈசனும், ஓசை கொடுக்கும் நாயகியும் அருள்பாலிக்கிறார்கள். இந்திரனும் சூரியனும் இத்தலம் வந்து பூஜை செய்து பலனடைந்துள்ளனர். இங்குள்ள மகாலட்சுமி மிகவும் சக்தி வாய்ந்தவள். எல்லா செல்வங்களும் அருளக்கூடியவள்.திருமகள் தவம் செய்து திருமாலுடன் இணைந்த தலம் என்பதால் இத்தலம் திருக்கோலக்கா எனப்பட்டது. ஓசை நாயகியின் சன்னதியில் சொற்பொழிவு நிகழ்த்துபவர்கள், இன்னிசை நிகழ்த்துபவர்கள் மாபெரும் புகழை அடைவார்கள் என்பது கண்கூடான உண்மை. தற்போது திருத்தாளமுடையார் கோவில் என அழைக்கப்படுகிறது.

வாய் பேச முடியாதவர்கள் இங்கு வந்து ஆனந்த தீர்த்தத்தில் நீராடி, ஓசை நாயகியிடம், ""ஜடப்பொருளான தாளத்திற்கு ஓசை கொடுத்த நாயகியே, பேசும் சக்தியைக்கொடு,' என வேண்டி, அம்மன் பாதத்தில் தேனை வைத்து அர்ச்சனை செய்து அதை எடுத்து சாப்பிட்டு வர வேண்டும்.  மகாலட்சுமி தவம் இருந்து மகாவிஷ்ணுவை திருமணம் செய்த தலம் என்பதால், திங்கள் மற்றும் வெள்ளி கிழமைகளில் பெண்கள் இங்குள்ள மகாலட்சுமிக்கு, தொடர்ந்து 6 வாரம் மஞ்சள் பொடியால் அர்ச்சனை செய்தால் விரைவில் திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.




சித்திரை திருவாதிரையில் சீர்காழி சட்டை நாதர் கோயிலில் திருவிழா கொண்டாடப்படும். இரண்டாம் நாளன்று பால் உற்சவம் நடக்கும். அதன்பின் திருஞானசம்பந்தர் இத்தலத்திற்கு எழுந்தருளுவார். அன்று இரவு சிவபெருமான் சம்பந்தருக்கு பொன்தாளம் தருவார். மறுநாள் காலை பூப்பல்லக்கில் சம்பந்தர் திரும்புவது இங்கு நடக்கும் சம்பிரதாய திருவிழா. கார்த்திகை மாதத்தில் ஞாயிற்றுக் கிழமை தோறும் தீர்த்தவாரி நடக்கிறது.

      சிவன், திருநானசம்பந்தர்க்கு பொற்தாளம் வழங்கி வாழ்துதல்
                                           முலவர் சன்னதி -இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 15 வது தேவாரத்தலம் ஆகும்.
கோயிலின் எதிரில் திருக்குளம் ஆனந்ததீர்த்தம், முகப்பு வாயிலின் மேற்புறத்தில் வண்ணச் சுனையில் ரிஷபாரூடர் தரிசனம்- உள்நுழைந்ததும் வலப்பால் வாகன மண்டபம், நுழையும் போது நால்வர், அதிகார நந்தி சன்னதிகள் உள்ளன.

பிராகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனிபகவான், பைரவர், சூரியன் சன்னதிகள் உள்ளன. உள்மண்டபத்தில் வலப்பால் உற்சவத் திருமேனிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. நடராஜ சபை உள்ளது.

அம்பாள் சன்னதி தனிக்கோயிலாக உள்ளது - நின்ற திருமேனி. ஞானசம்பந்தர் பொன் தாளத்தை இரு கைகளிலும் ஏந்தி நிற்கும் உற்சவத் திருமேனி தரிசிக்கத்தக்கது. கோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோற்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்


















                              ஸ்ரீ  மஹாலட்சுமி ஆலயம்
                                              ஸ்ரீ  மஹாலட்சுமி ஆலயம்
                           தாயரர் சன்னதி ஒசை நாயகி அம்மன், திருநானசம்பந்தர்க்கு பொற்தாளத்திற்கு ஒசை வழங்குதல்
                             தாயரர் சன்னதி ஒசை நாயகி அம்மன்








11 comments:

  1. பணிவான வணக்கம் அருமையான பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete
  2. பணிவான வணக்கம் அருமையான பயனுள்ள பதிவுகள்

    ReplyDelete
  3. Ennutaiya ￰￶என்னுடைய மகளுக்கு பேச்சு சரிவர வராது ஓசைநாயகிஅருள் புரிந்து என் மகள் பேச்சு வர வேண்டுகின்றேன்

    ReplyDelete
    Replies
    1. கடவுளை நம்புங்கள் நல்லது நடக்கும்

      Delete
    2. Kandippa nadakkum sendru varungal

      Delete
  4. வணக்கம்..மிக அருமையான அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய பதிவு. நன்றி

    ReplyDelete
  5. Enna son 5 yr not speaking how to start this prayer help me

    ReplyDelete
    Replies
    1. Honey one bottle vangittu archana and honey neivethiyam panni unga child ku 45 day kudunga kandippa pesuvan...

      Delete
  6. வணக்கம் ஐயா என்னுடைய குழந்தைகள் இருவருக்கும் பேச்சு வரவில்லை. இந்த அம்மன் கோயில் பற்றி இப்பொழுது தான் தெரியும் .எனக்கு அங்கு வர வேண்டும். எனக்கு பூஜை உதவி செய்ய முடியுமா ஐயா .

    ReplyDelete
  7. Casino - JTM Hub
    Visit casino.jtm.com for all of the great games, 문경 출장마사지 slots, 속초 출장안마 live 경기도 출장안마 dealer and live casino games. View 익산 출장안마 jtm.com games 아산 출장마사지 and apps for iOS and Android.

    ReplyDelete